search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி விபத்து"

    • விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கன்னிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (வயது 60), மதியழகன் (55 ), சுப்பிரமணி (54). அனைவரும் கூலித் தொழிலாளிகள்.

    இவர்கள் 3 பேரும் வடுவூர் அருகே உள்ள புள்ளவராயன் குடிகாட்டில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை மூன்று பேரும் வீட்டில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது புலவர் நத்தம் பகுதியில் சென்றபோது அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்தனர்.

    இதற்காக மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் வளைவில் திருப்பினர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த மினி லாரி சாலையில் கிடந்த மூன்று பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் முனியாண்டி, மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் லாரி டிரைவர் எந்தவித காயமும் இன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக முக்கிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் எந்தவித காயமும் இன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் தடுப்புச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம், கண்காணிப்பு கேமரா என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

    • விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவரம்:

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் இரும்புகளை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். 3 மணிநேரம் போராடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரெய்லர் லாரி ஒன்று இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது.
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பேங்க் ஆப் பரோடா வங்கி எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற டிரெய்லர் லாரி ஒன்று இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது.

    மேலும்,பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்று பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்று விட்டது. இதனால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.

    இதே போன்று பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையிலும், பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. இதனால் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுதந்திர தின விழாவை கொண்டாட அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்களும், ஆசிரியர்களும், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்த ஒன்றிய குழு உறுப்பினர்களும் சாலை ஓரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று மதியம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பெரியபாளையம் கோவில் அருகே இருந்த பழுதான லாரியை பொதுமக்களும்,போலீசாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.மேலும், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளான டிரெய்லர் லாரியையும் பொதுமக்களும்-போலீசாரும் கிரேன்மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர்,வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இன்று அரசு விடுமுறை மற்றும் சுதந்திர தின விழா,கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் முக்கிய நாள் என்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    • கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சா லையில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு கண்ணாடி லோடுகளை ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் வந்துக் கொண்டிருந்த வேன் மோதியதில் வேன் டிரைவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சேலம் ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். பிரகாஷ் (வயது 36) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா (வயது 35) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் பிரகாஷ் சேலத்தில் இருந்து சென்னைக்கு லோடு ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்றார். லோடு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு திரும்பினார்.

    கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சக்கரத்தில் சிக்கி பரிதாபம்
    • ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள ஏரிகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). திருமணம் ஆகாத இவர் விவசாயம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஏரிக்கொல்லை கிராமத்திலிருந்து அணைக்கட்டு நோக்கி சக நண்பர்களுடன் வெவ்வேறு பைக்கில் சென்றனர். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டுள்ளனர்.

    ஆவின் டேங்கர் லாரிக்குள் பிரபு நிலை தடுமாறி விழுந்தார். பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கோயம்பேடு, சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜா (வயது24). இவர் நேற்று நள்ளிரவு கொளத்தூர் 200 அடி சாலை செந்தில் நகர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து ரோட்டில் பீர் ஆறாக ஓடியது.
    • விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பீர் பாட்டில்கள் உடைந்து நாசமானது.

    ஊத்துக்குளி:

    செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பீர் கம்பெனியிலிருந்து கோயம்புத்தூரில் உள்ள டாஸ்மார்க் குடோனிற்கு லாரியில் 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு கோவையை நோக்கி வந்தது.

    லாரியை பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் ஓட்டி வந்தார். லாரி இன்று காலை 8 மணி அளவில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் அடுத்த பள்ளக்கவுண்ட ன்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து ரோட்டில் பீர் ஆறாக ஓடியது. மேலும் இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் தங்களுக்கு தேவையான அளவு பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். இதனிடையே பின்னால் வந்த மற்றொரு லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை அருகில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பீர் பாட்டில்கள் உடைந்து நாசமானது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி சாலையின் குறுக்கே திரும்பி திருவேற்காடு நோக்கி செல்ல முயன்றது.
    • பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன் பகுதி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

    பூந்தமல்லி:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆம்னி பஸ் ஒன்று 22 பயணிகளுடன் நேற்று இரவு கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரவாயலில் இருந்து திருவேற்காடு நோக்கி கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

    அந்த லாரி சாலையின் குறுக்கே திரும்பி திருவேற்காடு நோக்கி செல்ல முயன்றது. அப்போது வேகமாக வந்த கர்நாடகா மாநில ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது.இதில் பஸ்சின் முன் பகுதி கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தது.

    லாரியின் பின்பகுதியும் உடைந்து சேதம் அடைந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் இறங்கி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆம்னி பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. பிறகு பஸ் முன்பகுதியில் தீப்பிடித்தது.

    இதனை கண்டதும் ஆம்னி பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பஸ்சுக்குள் பயணிகள் இருந்ததால் உதவி கோரி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஆம்னி பஸ்சில் உறங்கி கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன் பகுதி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இந்த தீயானது அருகில் இருந்த லாரிக்கும் பரவியது. இந்த நிலையில் பஸ்சும், லாரியும் ஒன்று சேர்ந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தீயை போராடி அணைத்தனர்.

    இதில் ஆம்னி பஸ் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. லாரியின் பின்பகுதியில் இருந்த டயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் நடுவே தீ விபத்தில் சிக்கி எரிந்து கிடந்த இரண்டு வாகனங்களையும் கிரேன் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை நேரத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வேலைக்கு செல்பவர்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

    வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாலும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மதுரவாயலில் இருந்து திருவேற்காடு செல்வதற்காக சாலையின் குறுக்கே திரும்பிய லாரியை கவனிக்காமலும் சிக்னலை மதிக்காமலும் கர்நாடகா மாநில சொகுசு ஆம்னி பஸ் வேகமாக வந்து லாரியின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

    • லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகள்கள் கனிஷ்கா(வயது 11), சஷ்விகா(7). இவர்கள் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இவர்களை தினமும் அவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். அது போல் இன்று காலை 2பேரையும் அவரது தாத்தா மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். பல்லகவுண்டம்பாளையம் சாலையில் செல்லும் போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பள்ளி குழந்தைகள் கனிஷ்கா, சஷ்விகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான குழந்தைகள் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடைக்குள் புகுந்தது.

    இதில் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் குண்டடம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் முத்துச்சாமி(65) சுப்பன் (70) மற்றும் லாரி டிரைவர் ரத்தினகுமார் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகேந்திரன், மாணிக்கம், செல்லமணி ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பியது. அப் போது கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பிய லாரி யின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் உதிரி பாகங் கள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட் டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடி யாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அரை மணிநேரம் போராடிஇடிபா டுகளில் சிக்கி இருந்த டிரை வர் உடலை மீட்டனர். பின் னர் ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்ப வம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மேலும் விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×